.

Pages

Saturday, February 2, 2019

மல்லிபட்டினத்தில் மீனவ சமுதாய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு!

மல்லிபட்டினம், பிப்.02-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தஞ்சாவூர் மாவட்ட கடலோரக் கிராம மீனவ சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் இணைந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் கடல்பசு (ஆவுரியா) உள்ளிட்ட, அரசால் பிடிக்க தடை செய்யப்பட்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கடல்பசு (ஆவுரியா) உதவித்தொகை திட்டம் இந்திய வன உயிர் நிறுவனம் மற்றும் வனத்துறை சார்பில் மாதம் ரூ 500 வீதம் 24 மாதங்களுக்கு ரூ 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான போட்டித் தேர்வை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

முன்னதாக, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் கே.மதுமகேஷ் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.குருசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''அபூர்வ வகை உயிரினங்களான கடல்பசுக்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அழிந்து வரும் நிலையில் உள்ள இதுபோன்ற கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் மோகன், கடலோரக் காவல்துறை ஆய்வாளர் சுபா, மீன் வளத்துறை ஆய்வாளர் கங்கேஷ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மீனவர் கிராமத்தலைவர் பேத்தையா, இந்திய வன உயிர் நிறுவன அதிகாரிகள் குழுவினர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் ருக்மிணி சேகர் நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் என்.குருசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.