.

Pages

Sunday, February 24, 2019

தமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டம்: விடுபட்டவர்கள் கணக்கெடுப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக முகாம் அலுவலகத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை நிதியுதவி (ரூ.2000) வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறுவது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அணணாதுரை தலைமையில் இன்று (23.02.2019) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கிட உத்தரவிட்டதனை தொடர்ந்து, கணக்கெடுக்கும் பணி நடைபெற்று இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணி முடிவடைந்தது. இதில் ஊரக பகுதிகளில் 1,26,082 குடும்பத்தினரும், நகர்ப்புற பகுதிகளில் 51,977 குடும்பத்தினரும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தகுதி வாய்ந்த குடும்பங்கள் விடுபட்டுள்ளதாக தமிழக அரசிற்கு தெரியவந்ததின் பேரில் தற்போது விடுப்பட்ட தகுதி வாய்ந்த குடும்பங்கள் குறித்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கணக்கெடுப்பு பணி செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விடுபட்ட குடும்ப தலைவி/தலைவர் இதற்கான படிவத்தினை www.tnrd.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி  அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இவ்விண்ணப்பங்களை தங்கள் குடியிருப்பு பகுதியில் நேரடியாக வந்து பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ள ஊரக மற்றும் நகர்ப்பகுதிகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஊரக மற்றும் நகர்ப்புற அலுவலர்கள்/பணியாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வருகை தரும்பொழுது விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை தயாராக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஊரக பகுதிகளுக்கு வருகை தரும் வறுமை ஒழிப்பு சங்க அலுவலர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலர்கள், வட்டார வள பயிற்றுநர்கள், சுய உதவிக்குழு பயிற்சியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நகராட்சி அலுவலர்களிடமும் நேரடியாக வழங்கி அதற்கான ஒப்புதல் சீட்டினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் இந்துபாலா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.