.

Pages

Saturday, February 16, 2019

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதர கோரிக்கை!

அதிராம்பட்டினம், பிப்.16
அதிராம்பட்டினம் சேது சாலை தொடங்கி, ஹாஜா நகர், கடற்கரைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரை செல்லும் சுமார் 800 மீட்டர் நீளமுள்ள பிரதான சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால், காரைக்குடி ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணி நிறைவடைந்து அடுத்து ஓரிரு மாதங்களில் ரயில் போக்குவரத்து தொடங்கி விடும். எனவே, ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு முன்பாக இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கடற்கரைத்தெரு ஜமாஅத் தலைவர் அப்துல் ரெஜாக் கூறியது;
'கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை சீரமைக்காமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இப்பகுதியில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி மற்றும் ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ளதால், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் கடந்து செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணிக்காக கனரக வாகனங்களில் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதனால் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டு, குழியுமாக காட்சி தருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்று, பயணம் செய்ய முடியாத நிலையிலும், வெயில் காலங்களில் செம்மண் தூசிகள் பறந்து அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. காரைக்குடி ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணி நிறைவடைந்து அடுத்து ஓரிரு மாதங்களில் ரயில் போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதால், பயணிகள் கடந்து செல்வது அதிகமாகிவிடும். எனவே, ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு முன்பாக இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.