.

Pages

Thursday, February 21, 2019

அதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து போராடும் நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள்!

அதிராம்பட்டினம், பிப்.21
குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அளித்த மனு தொடர்பாக  நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை  சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லாம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஜன.9 அன்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கே.கே சசிதரன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிப்பதற்காக நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.எச் அஸ்லாம், எம்.நிஜாமுதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், முகமது சிராஜுதீன், கமால் உசேன் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் பிராகாஷை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து விவாதித்தனர். இதில், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது பற்றியும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் அபாயம் பற்றியும், கடந்த ஆண்டு அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியது குறித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குறுதியளித்தும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காதது குறித்தும், இனி வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமலிருக்க நீதிமன்றம் மூலம் சட்டபூர்வ உத்தரவு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து நீர் நிலைபாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் எஸ்.எச் அஸ்லம் கூறியது;
'குடிநீர் தேவைக்காக அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் கேட்டு அசராமல் தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட வில்லை. இதையடுத்து நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். இது காலம் கடந்த முயற்சி என்றாலும், இனிவரும் காலங்களில் அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடமறுக்கும் அதிகாரிகளுக்கு படிப்பினையாக அமையும். எதிர்காலத்தில் எவ்வித குறுக்கீடுமின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுத்தருவதாக எங்கள் வழக்குரைஞர் எங்களிடம் கூறியிருக்கிறார்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.