.

Pages

Tuesday, February 26, 2019

காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் கீழத்தோட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் கீழத்தோட்டம் ஊராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசியது;
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றம் செய்யும் உன்னத பணியை நாட்டு நலப்பணித்திட்டம் செய்கிறது. தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. எனவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்து சமூகப்பணியாற்ற வேண்டும். ஈகை, இரக்கம், பொதுநலன், சமத்துவம், மனிதநேயம் போன்ற உயர்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள தயாராக வேண்டும்' என்றார்.

கல்லூரி துணை முதல்வர்கள் எம்.முகமது முகைதீன், எம்.நாசர், பேராசிரியர்கள் டி.லெனின், ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் மார்ச் 04 ல் நிறைவடைகிறது. இதில், தூய்மைப் பணி, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், மரக்கன்று நடுதல், நீர்நிலை வாய்க்கால் சீரமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்தல், கருத்தரங்கம், கண் பரிசோதனை முகாம், பொது சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

முகாமின் முதல் நாளான இன்று கீழத்தோட்ட கிராமப் பகுதிகளில் கிடந்த குப்பைகள், தேவையற்ற கழிவுகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே. முத்துக்குமரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இம்முகாமில், கீழத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலா, கீழத்தோட்டம் கிராம பிரமுகர்கள், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
  
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.