.

Pages

Tuesday, February 5, 2019

அதிராம்பட்டினத்தில் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.05
அதிராம்பட்டினத்தில் வாடகை கார் ஓட்டுனர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று (பிப்.05) செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கார், வேன் வாகன ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில், ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (பிப்.05) செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய ஸ்டாண்ட்டில் உள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயங்கவில்லை.

முன்னதாக, அண்மையில் சென்னையில் உயிர்நீத்த வாகன ஓட்டுனர் எம்.ராஜேஷ்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் கார், வேன் வாகன ஓட்டுனர் நலச்சங்கத் தலைவர் எஸ்.சேக்தாவூது, கெளரவத் தலைவர்கள் ஜி.எஸ்.எம் வாண்டையார், சிக்கந்தர்,  துணைத்தலைவர் கே.பாலசுப்பிரமணியன், செயலாளர் என்.அன்வர்தீன், துணைச்செயலாளர் டி.பைசல் அகமது, பொருளாளர் எஸ்.கே முகமது காசிம், துணைப் பொருளாளர் ஜெ.முருகன் உள்ளிட்ட அச்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்: 
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.