.

Pages

Thursday, February 14, 2019

அதிரை அருகே கடலில் மூழ்கி பெட்டிக்கடைகாரர் சாவு!

அதிராம்பட்டினம், பிப். 14
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் அலையில் சிக்கி பெட்டிக்கடைக்காரர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வாண்டையார்புறத்தை சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (45). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் பழனி (37), ராஜா (41), தமிழழகன் (25), நடராஜன் (45) ஆகியோருடன் அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கடலில் புதன்கிழமை  குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, திடிரென சுப்பிரமணியனை கடல் அலை ஆழமான பகுதிக்கு இழுத்துச்சென்றதால் உயிரிழந்தார். மீனவர்கள் சிலர் சுப்பிரமணியன் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த அதிராம்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பிரமணியனுக்கு மனைவி மற்றும் 5 வயது பெண் குழந்தை உள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.