தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பேரணியை அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி வண்டிப்பேட்டை பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 150 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர்.மேலும், சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
பேரணியில், அதிராம்பட்டினம் காவல்நிலைய போலீசார் ஆசைத்தம்பி, மதியழகன், பூமிநாதன், செந்தில்குமார், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் என்.ரகுபதி, மேலாளர் எஸ்.சுப்பையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச்செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.