.

Pages

Thursday, February 28, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் 64-வது ஆண்டு விளையாட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 64-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் தலைமை ஏற்று இந்திய தேசியக் கொடி ஏற்றினார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் ஒலிம்பியன் சைமன் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்து முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.