அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறுப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில், உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரவில் ஜெனரேட்டர் உதவியுடன் ரயில் நிலையத்தில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சிக்னல் ரிலே, சிக்னல் கேபிள் புதைப்பது, பிளாட் பார்ம்-2 ல் மேற்கூரை மற்றும் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு 'அபராதம்' விதிக்கப்படும் என ரயில்வேதுறை அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் இரவிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயலின் காரணமாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சேதமடைந்த சிக்னல் கோபுரம் மற்றும் ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி துரிதமாக சீர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.