.

Pages

Thursday, February 7, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், பிப்.07
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய இயற்கை பேரிடர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக தூத்தூர் ஜென் ஜுட்ஸ் கல்லூரி விலங்கியல்துறை முன்னாள் தலைவர், கடல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் கலந்துகொண்டு, கடலோரப் பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரிடர் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அண்மையில் வீசிய கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் பற்றி கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் மல்லிபட்டினம் ஏ.தாஜுதீன், பத்திரிகையாளர் சிவா, கடலோர கிராமத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ. அம்சத் வரவேற்றுப் பேசினார். முடிவில், துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார். 

நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் வி. கானபிரியா, ஏ. மஹாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி மற்றும் அதிராம்பட்டினம் காரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, கிழத்தோட்டம்  கிராம மீனவர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.