.

Pages

Monday, February 25, 2019

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ கூட்ட அரங்கில் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (25.02.2019) கலந்து கொண்டார். 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: -
எதிர்வரும் 2019 இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியுள்ளவாறு வாக்காளர் பட்டியலில் புதிதாக இளம் வாக்காளர்களை சேர்த்தல், வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்வதன் அவசியம், வாக்களிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகம் வாக்களிப்பது இல்லை. 2009 இந்திய பொது தேர்தல் காட்டிலும், 2014 பொது தேர்தலில் கூடுதலான வாக்குப்பதிவு நடைபெற்று 75 சதவிகிதம் பதிவானது.  வாக்களிப்பதன் அவசியம் குறித்து இந்திய ஆணையத்தால் அறிவுறுத்தியபடி வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் சேர்க்கை குறித்து SVEEP எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 18 வயது பூர்ததியடைபவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்காகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து விளக்குவதற்காகவும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் நேரடியாக சென்று ஆதார ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணைய தள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு எதிர்வரும் தேர்தலில் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். மேலும் மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தங்களது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் முறை ஆகியவை குறித்து மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு மாணவ மாணவியர்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்து பார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருணகிரி, மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.