அதிராம்பட்டினம், பிப்.03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடந்து வரும் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, தையல் பயிற்சியாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கு 6 மாத கால தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் ஓய்வில் உள்ள பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் பயிற்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 39 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எச்.முகமது இப்ராஹீம் ஏ.முகமது முகைதீன், எஸ்.எம்.ஏ செய்யது முகமது புஹாரி, எம். நிஜாமுதீன், எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடந்து வரும் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, தையல் பயிற்சியாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கு 6 மாத கால தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் ஓய்வில் உள்ள பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் பயிற்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 39 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எச்.முகமது இப்ராஹீம் ஏ.முகமது முகைதீன், எஸ்.எம்.ஏ செய்யது முகமது புஹாரி, எம். நிஜாமுதீன், எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.