.

Pages

Saturday, February 2, 2019

தஞ்சையில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை!

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மருத்துவமனை கட்டும் பணி முடிவடைந்து உபகரணங்களும் வந்து விட்டன. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவிற்கு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 8.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 20 ஆயிரத்து 196 சதுர அடி பரப்பளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இதில் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி ஆகியவை செயல்பட உள்ளது.

இந்த கட்டிடம் மொத்தம் 5 மாடிகளுடன் 3 பிரிவுகளை கொண்டது. தரைதளத்தில் ரேடியாலஜிதுறை, ரத்த வங்கி, லேப், சமையல்கூடம், சலவைக்கூடம் ஆகியவை உள்ளன. முதல்தளத்தின் ஏ பிரிவு 56 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. 2-வது தளத்தின் ஏ பிரிவு 34 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும், 3-வது தளத்தின் பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. இதே போல் 4 மற்றும் 5-வது தளத்தின் பி பிரிவு தலா 40 படுக்கைகள் என மொத்தம் 290 படுக்கைகள் கொண்டது. இதில் 5 அறுவை சிகிச்சை மையங்களும் அடங்கும்.

இந்த மருத்துவமனையில் தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள் ரூ.80 லட்சத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரூ.20 லட்சத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும், ரூ.50 லட்சத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.