பட்டுக்கோட்டை, பிப்.02-
பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கத்தரிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி விவசாயி. இவரது மனைவி தமிழரசி. இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான வயல்காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு, சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டார். திரும்ப சாயங்காலம் ஆடுகளை ஓட்டி வர வயலுக்கு சென்றவர் ஒரு ஆட்டை மட்டும் காணாமல் தேடிச் சென்ற போது, அங்கிருந்த புதர் பகுதியில், ரத்தம் வடிந்த நிலையில் ஆடு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆட்டின் உடல் பகுதியை ஏதோ மிருகம் கடித்து தின்றிருந்தது. இதையடுத்து இறந்து கிடந்த ஆட்டை அப்படியே போட்டு விட்டு மற்ற ஆடுகளுடன் வீடு திரும்பினார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று தனது வயலில் ஆடுகளை மேயவிட்டு வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது, சிறுத்தைப்புலி போன்ற தோற்றத்துடன் ஒரு மிருகமும், அதனுடன் நான்கு குட்டிகளும் செல்வதைத் கண்டு பதறியபடி ஆடுகளை ஓட்டியவாறு வீடு வந்து சேர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் அ.வீரமுத்து என்பவரிடம் தமிழரசி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீரமுத்து, பட்டுக்கோட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் என்.குருசாமி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் மோகன் மற்றும் வனத்துறையினர், கரம்பயம் கத்தரிக்கொல்லை வயல்காட்டில் சென்று பொதுமக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை அன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மிருகங்களின் காலடித்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து தேடியும் எந்த மிருகமும் சிக்கவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ''இப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக தெரிய வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி இப்பகுதியில் மயில்கள் ஏதோ மிருகத்தால் தாக்கப்பட்டு, இறந்து கிடப்பது உண்டு. நரி போன்ற மிருகமாக இருக்கலாம் என நினைத்தோம். இப்போது வந்துள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தைப் புலி வர வாய்ப்பு இல்லை. கழுதைப்புலி அல்லது நரியாக இருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர். வனத்துறை பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள வனவிலங்குகள் இப்பகுதியில் வர வாய்ப்பு இல்லை. குறிப்பாக சிறுத்தைப்புலி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விரைவில் அப்படி ஏதேனும் மிருகம் தென்பட்டால் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும்'' என்றனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கத்தரிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி விவசாயி. இவரது மனைவி தமிழரசி. இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான வயல்காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு, சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டார். திரும்ப சாயங்காலம் ஆடுகளை ஓட்டி வர வயலுக்கு சென்றவர் ஒரு ஆட்டை மட்டும் காணாமல் தேடிச் சென்ற போது, அங்கிருந்த புதர் பகுதியில், ரத்தம் வடிந்த நிலையில் ஆடு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆட்டின் உடல் பகுதியை ஏதோ மிருகம் கடித்து தின்றிருந்தது. இதையடுத்து இறந்து கிடந்த ஆட்டை அப்படியே போட்டு விட்டு மற்ற ஆடுகளுடன் வீடு திரும்பினார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று தனது வயலில் ஆடுகளை மேயவிட்டு வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது, சிறுத்தைப்புலி போன்ற தோற்றத்துடன் ஒரு மிருகமும், அதனுடன் நான்கு குட்டிகளும் செல்வதைத் கண்டு பதறியபடி ஆடுகளை ஓட்டியவாறு வீடு வந்து சேர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் அ.வீரமுத்து என்பவரிடம் தமிழரசி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீரமுத்து, பட்டுக்கோட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
பின்னர் மாவட்ட வன அலுவலர் என்.குருசாமி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் மோகன் மற்றும் வனத்துறையினர், கரம்பயம் கத்தரிக்கொல்லை வயல்காட்டில் சென்று பொதுமக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை அன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மிருகங்களின் காலடித்தடம் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து தேடியும் எந்த மிருகமும் சிக்கவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ''இப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாக தெரிய வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி இப்பகுதியில் மயில்கள் ஏதோ மிருகத்தால் தாக்கப்பட்டு, இறந்து கிடப்பது உண்டு. நரி போன்ற மிருகமாக இருக்கலாம் என நினைத்தோம். இப்போது வந்துள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தைப் புலி வர வாய்ப்பு இல்லை. கழுதைப்புலி அல்லது நரியாக இருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர். வனத்துறை பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும்'' என்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள வனவிலங்குகள் இப்பகுதியில் வர வாய்ப்பு இல்லை. குறிப்பாக சிறுத்தைப்புலி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விரைவில் அப்படி ஏதேனும் மிருகம் தென்பட்டால் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும்'' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.