.

Pages

Monday, February 11, 2019

பட்டுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

பட்டுக்கோட்டை, பிப்.11
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை  நடைபெற்றது.

இதில், பிப். 16 ம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அனைத்து மதத்தவர்கள் ஒரு தாய் மக்களாக, அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. எனவே, இந்த மாநாட்டில் தவறாமல் கலந்து கொள்ள  வேண்டும் என அனைத்து சமுதாய மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் மதுக்கூர் அப்துல்காதர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசல் இமாம் அயூப்கான் கிராத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. நசுருதீன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபீதீன், அதிரை பேரூர் தலைவர் கே.கே. ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் உள்ளிட்டோர் பேசினர்.

தஞ்சாவூர், அதிராம்பட்டினம், மதுக்கூர், செந்தலைப்பட்டினம், ஆவணம், சம்பைப்பட்டினம், வண்ணாரப்பேட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.