அதிராம்பட்டினம், பிப்.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத்தெரு குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை காலங்ககளில் வெளியேறும் மழை நீர் ஆகியவை அப்பகுதியையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையம் செல்லும் பிராதான சாலை வழியாக வடிகால் அமைக்கப்பட்டு அதில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணி மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், ரயில் நிலைய நுழைவாயில் பகுதி சுமார் 10 அடி உயரத்திற்கு எழுப்பட்டுள்ளதால், கழிவு நீர் / மழை நீர் சீராகச் செல்ல வழியில்லாமால் வடிகாலில் நிரம்பி வழிந்து அருகில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் இப்பகுதி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கழிவு நீர் சீராகச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பணிகளும் நடக்கவில்லை. எனவே, கழிவு நீர் / மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், சீராகச் செல்லும் வகையிலும், புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால் அமைத்து தருவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத்தெரு குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை காலங்ககளில் வெளியேறும் மழை நீர் ஆகியவை அப்பகுதியையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையம் செல்லும் பிராதான சாலை வழியாக வடிகால் அமைக்கப்பட்டு அதில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணி மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், ரயில் நிலைய நுழைவாயில் பகுதி சுமார் 10 அடி உயரத்திற்கு எழுப்பட்டுள்ளதால், கழிவு நீர் / மழை நீர் சீராகச் செல்ல வழியில்லாமால் வடிகாலில் நிரம்பி வழிந்து அருகில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. இதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் இப்பகுதி பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கழிவு நீர் சீராகச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பணிகளும் நடக்கவில்லை. எனவே, கழிவு நீர் / மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காதவாறும், சீராகச் செல்லும் வகையிலும், புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால் அமைத்து தருவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.