.

Pages

Saturday, February 2, 2019

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பணி முன்னேற்றம் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் டாக்டர் வள்ளலார் தலைமையில் இன்று (02.02.2019) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் இது குறித்து கேட்டறிந்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் தெரிவித்ததாவது : -

31.01.2019 அன்று வெளியிடப்பட்டு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் வரிசை எண், படம், பெயர், விலாசம், பாலினம், வயது ஆகிய விவரங்கள் சரியாக இடம் பெற்றுள்ளதா வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்டு சரி பார்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து வாக்காளர் பட்டியலில் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையான வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தி தர வசதியாக அமையும். 

2019 மக்கள் தொகையின் படி 18 மற்றும் 19 வயதுள்ள 82,523 நபர்களின் 27,823 பேர் மட்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  அதே போல் 20 முதல் 29 வயது வரை 4,16,745 நபர்களில் 3,83,808 நபர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களை சேர்ப்பதற்கு கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள், ஆசிரியர் பயிற்சி மையம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ததை கள விசாரணை மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.  இவ்வாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் டாக்டர் வள்ளலார் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் வீராச்சாமி (கும்பகோணம்), மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் கங்காதேவி, துணை ஆட்சியர் (ச.பா.தி) ஸ்டெல்லா ஞானமணி பிரமீளா, வட்டாட்சியர்கள் அருணகிரி, ஜானகிராமன், ராஜேஸ்வரி, தேர்தல் தனி வட்டாட்சியர் இராமலிங்கம் மற்றும் தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.