தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகாலில் காவல் துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் முன்னிலையில் இன்று (26.02.2019) நடைபெற்றது.
எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துதல், தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுத்தல், வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து காவல் துறை அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
பயிற்சி கூட்டத்தில் தேர்தலின் போது காவல் துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளக்கி கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், காவல் துறை அலுவலர்களுக்கு விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துதல், தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுத்தல், வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து காவல் துறை அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
பயிற்சி கூட்டத்தில் தேர்தலின் போது காவல் துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளக்கி கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், காவல் துறை அலுவலர்களுக்கு விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.