அதிரை நியூஸ்: பிப்.13
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தாளாளரும், அதிராம்பட்டினம், செக்கடி பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவருமாகிய ஹாஜி A.J. அப்துல் ரஜாக் (வயது 83) அவர்கள் கடந்த பிப்.03 ந் தேதி சென்னையில் காலமானார்.
இந்நிலையில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சிறப்புக்கூட்டம் இன்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு அவ்வமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்.
செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அண்மையில் மறைந்த ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளர் ஓ.கே.எம் சிபஹததுல்லா அவர்களின் நகைக்கடையில் திருட்டுப் போனது தொடர்பாக வருத்தம் தெரிவித்து, நகைகள் மற்றும் பொருட்கள் விரைவில் கிடைத்திட துஆ செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தாளாளரும், அதிராம்பட்டினம், செக்கடி பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவருமாகிய ஹாஜி A.J. அப்துல் ரஜாக் (வயது 83) அவர்கள் கடந்த பிப்.03 ந் தேதி சென்னையில் காலமானார்.
இந்நிலையில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சிறப்புக்கூட்டம் இன்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு அவ்வமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்.
செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அண்மையில் மறைந்த ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளர் ஓ.கே.எம் சிபஹததுல்லா அவர்களின் நகைக்கடையில் திருட்டுப் போனது தொடர்பாக வருத்தம் தெரிவித்து, நகைகள் மற்றும் பொருட்கள் விரைவில் கிடைத்திட துஆ செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.