.

Pages

Sunday, February 17, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் உத்தம திருநபியின் உதய தினவிழா ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகம்மது முகைதீன் வரவேற்றுப்  பேசினார்.

சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா துணைப் பொதுச்செயலாளரும், கோயம்புத்தூர் கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி ஏ.அப்துல் அஜீஸ் பாஜில் பாக்கவி கலந்துகொண்டு பேசியது;
'அமைதி, நீதி, கருணை போன்றவற்றிற்கு சொந்தக்காரரான முகமது நபி (ஸல்) அவர்கள் மனிதரிடத்தில் சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் போன்ற நற்பண்புகளை விதைத்தவர்' என்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி கல்லூரியில் நடந்த 'மறைகள் போற்றும் மாநபி' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் 'நபி வழித்திருமணம்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா முடிவில், கல்லூரி துணை முதல்வர் எம்.நாசர் நன்றி கூறினார்.
விழா ஏற்பாட்டினை, கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அ. கலீல் ரஹ்மான் செய்திருந்தார். விழாவில், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.