.

Pages

Tuesday, February 5, 2019

தஞ்சையில் பிப்.9ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 09.02.2019 அன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடந்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.02.2019 அன்று மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுவோருக்கு 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர்.  இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச பயிற்சி வகுப்பிற்காக பதிவுகளையும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் RRB, TNPSC, SSC, IBPS, SBI போன்ற போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும் மேற்கொள்ள உள்ளது.  இம்முகாமில் 18 வயது முதல் 45 வரையான (இருபாலர்) பணி நாடுவோர்கள் கலந்து கொள்ளலாம்.  விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித் தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.