.

Pages

Sunday, February 24, 2019

பேரூராட்சியில் மொபைல் வாகனம் மூலம் வரி வசூல் ~ இதர சேவை தொடக்கம்!

பேராவூரணி பிப்.24-
பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் மொபைல் வாகனம் மூலம் பொதுமக்களை நேரடியாக தேடிச் சென்று வரிவசூல் மற்றும் இதர சேவைகள் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை மற்றும் தனி அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ப.குற்றாலிங்கம் ஆகியோர் ஆலோசனைப்படி, பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி வசூலிக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வந்து செலுத்தவும், பேரூராட்சி பணியாளர்கள் நேரடியாக சென்று வசூல் செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. மேலும் இரண்டு ஆம்னி வேனில் லேப்டாப், பிரிண்டர், இன்வெர்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் வீடு தேடிச் சென்று நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் வீட்டுவரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் இதர சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதற்கு தீர்வு காணப்படுகிறது.

இதுகுறித்து செயல் அலுவலர் மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் ஆகியோர் கூறுகையில், " பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலைப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் செவ்வணே செய்திட இரண்டு நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் வாரத்தில் 7 நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வசூல் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பில் கலெக்டர், இரண்டு பணியாளர்கள் வரி வசூலில் ஈடுபடுகின்றனர். இது பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் வரி வசூலில் முன்னேற்றமும் உள்ளது" என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக  நடமாடும் கணினி ஆன்லைன் வரிவசூல் வாகனம் மூலம் பேராவூரணி பேரூராட்சியில் வரிவசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.