பேராவூரணி, பிப்.12-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு சொந்தமான மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அன்று பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்ததோடு, விதி மீறியோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 14 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் கூடாது இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி உத்தரவின் பேரில், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அன்று பேரூராட்சிக்கு சொந்தமான மீன், இறைச்சி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உணவகங்கள், பழக்கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் சில கடைகளில் தடையை மீறி உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டு, 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ 12 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, குடிநீர், சொத்துவரி மற்றும் இதரக் கட்டணங்களை தாமதமின்றி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு சொந்தமான மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அன்று பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்ததோடு, விதி மீறியோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 14 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் கூடாது இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி உத்தரவின் பேரில், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அன்று பேரூராட்சிக்கு சொந்தமான மீன், இறைச்சி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உணவகங்கள், பழக்கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் சில கடைகளில் தடையை மீறி உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டு, 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ 12 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, குடிநீர், சொத்துவரி மற்றும் இதரக் கட்டணங்களை தாமதமின்றி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.