அதிராம்பட்டினம், பிப்.06
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ரோபோடிக்ஸ் ஒரு நாள் பயிற்சி முகாம் கல்லூரி அரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து பேசியது;
'மாணவர்களிடையே பொதிந்திருக்கும் ஆர்வத்தையும், ஆற்றலையும் வெளியே கொண்டு வரும் நோக்கில் ரோபோடிக்ஸ் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரோபோடிக்ஸ் நுட்பங்களை நன்கு கற்றறிந்து எதிர்காலத்தில் பல அறிய படைப்புகளை உருவாக்க வேண்டும்' என்றார்.
முகாமில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'ஸ்பாரோஸ் இன்னாவேசன்' நிறுவன வல்லுநர் பொறியாளர் எஸ்.அருள்ராஜ் கலந்துகொண்டு, ரோபோடிக்ஸ் அறிமுகம், ரோபோ உருவாக்கம், அவற்றுக்கான புரோக்கிராமிங் குறித்து பயிற்சியளித்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் தலா 5 பேர் வீதம், 28 குழுக்களாக இருந்து ரோபோ பயிற்சி பெற்றனர். முடிவில் அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாட்டினை, முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஏ.ஆய்ஷா மரியம், துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர். இம்முகாமில், கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர்கள் ஏ.என் விக்னேஸ்வரன், எஸ். ஞானசரவணன், ஆர்.அபிநயா, எஸ்.அபிநயா, ஜி.ஜெஸி பிரெஸ்கா, ஆர்.செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ரோபோடிக்ஸ் ஒரு நாள் பயிற்சி முகாம் கல்லூரி அரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்து பேசியது;
'மாணவர்களிடையே பொதிந்திருக்கும் ஆர்வத்தையும், ஆற்றலையும் வெளியே கொண்டு வரும் நோக்கில் ரோபோடிக்ஸ் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரோபோடிக்ஸ் நுட்பங்களை நன்கு கற்றறிந்து எதிர்காலத்தில் பல அறிய படைப்புகளை உருவாக்க வேண்டும்' என்றார்.
முகாமில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'ஸ்பாரோஸ் இன்னாவேசன்' நிறுவன வல்லுநர் பொறியாளர் எஸ்.அருள்ராஜ் கலந்துகொண்டு, ரோபோடிக்ஸ் அறிமுகம், ரோபோ உருவாக்கம், அவற்றுக்கான புரோக்கிராமிங் குறித்து பயிற்சியளித்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் தலா 5 பேர் வீதம், 28 குழுக்களாக இருந்து ரோபோ பயிற்சி பெற்றனர். முடிவில் அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாட்டினை, முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஏ.ஆய்ஷா மரியம், துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.சேகர் ஆகியோர் செய்திருந்தனர். இம்முகாமில், கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர்கள் ஏ.என் விக்னேஸ்வரன், எஸ். ஞானசரவணன், ஆர்.அபிநயா, எஸ்.அபிநயா, ஜி.ஜெஸி பிரெஸ்கா, ஆர்.செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.