அதிராம்பட்டினம், பிப்.08
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் கே.கே. அப்துல் ரஹ்மான். இவரது மருமகன் சரபுதீன் (40) சமூக ஆர்வலர். எந்த ஒரு நல்ல முயற்சியையும் தன்னிலிருந்தே துவங்க வேண்டும் என்ற அரிய நடைமுறைக்கு ஏற்ப தன்னுடைய வீட்டு வாசலில் இயற்கை குளிர்ச்சாதன பெட்டியான மண்பானையில் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க குடிநீரை நிரப்பி வைத்துள்ளார்.
சிறியதெனினும் இந்த அரிய தாகம் தீர்க்கும் தர்மச் செயலால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இதேபோல், அனைவரும் தங்களால் இயன்ற நற்காரியங்களை முதலில் தங்களைச் சுற்றி துவக்கினால் அது பிறரும் செய்திட ஆர்வத்தை ஏற்படுத்தும்.
மேலும், அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க தனது வீட்டில் கூண்டு அமைத்து, நாள்தோறும் சிறுதானியங்களை சிட்டுக்குருவிகளுக்கு உணவாக அளித்து பராமரித்து வருகிறார்.
பிறருக்கு சிறந்ததொரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ள இளைஞர் சரபுதீனை வாழ்த்துவோம்.
குப்பைகளாலும் சாக்கடையாலும் மாசுபட்டுள்ள நம் அதிரையை சுத்தமாக வைத்துக் கொள்ள முதலில் நம் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: அதிரை அமீன்
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் கே.கே. அப்துல் ரஹ்மான். இவரது மருமகன் சரபுதீன் (40) சமூக ஆர்வலர். எந்த ஒரு நல்ல முயற்சியையும் தன்னிலிருந்தே துவங்க வேண்டும் என்ற அரிய நடைமுறைக்கு ஏற்ப தன்னுடைய வீட்டு வாசலில் இயற்கை குளிர்ச்சாதன பெட்டியான மண்பானையில் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க குடிநீரை நிரப்பி வைத்துள்ளார்.
சிறியதெனினும் இந்த அரிய தாகம் தீர்க்கும் தர்மச் செயலால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இதேபோல், அனைவரும் தங்களால் இயன்ற நற்காரியங்களை முதலில் தங்களைச் சுற்றி துவக்கினால் அது பிறரும் செய்திட ஆர்வத்தை ஏற்படுத்தும்.
மேலும், அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க தனது வீட்டில் கூண்டு அமைத்து, நாள்தோறும் சிறுதானியங்களை சிட்டுக்குருவிகளுக்கு உணவாக அளித்து பராமரித்து வருகிறார்.
பிறருக்கு சிறந்ததொரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ள இளைஞர் சரபுதீனை வாழ்த்துவோம்.
குப்பைகளாலும் சாக்கடையாலும் மாசுபட்டுள்ள நம் அதிரையை சுத்தமாக வைத்துக் கொள்ள முதலில் நம் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: அதிரை அமீன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.