அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜான் (43). கடந்த 3 ஆண்டுகளாக தனம் மெஸ் அறுசுவை உணவகத்தை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கும் உணவுகள் வீட்டுச் சாப்பாடு போன்று ஆரோக்கியமாகவும், அதிக சுவையுடனும் இருப்பதால் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், வங்கி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் என வாடிக்கையாளர்கள் வருகை அதிகம்.
இந்நிலையில், இதன் விரிவாக்கமாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர்கோல்ட் காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் 'தனம் மெஸ்' (ரெஸ்டாரண்ட்) உயர்தர சைவ / அசைவ உணவகத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் பாதிரியார் ஜேக்கப் செல்வராஜ் பிரார்த்தனை செய்து விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் கே.செய்யது அகமது கபீர், ஏ.அம்சத் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
'தனம் மெஸ்' நிறுவனர் ஜான் அனைவரையும் வரவேற்றார். அவரது தந்தை கே.ஆறுமுகம் உணவகத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில், 'தனம் மெஸ்' உணவக வாடிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து 'தனம் மெஸ்' நிறுவனர் ஜான் கூறியது;
"உணவே மருந்து' என வாழ்ந்த தமிழர்கள் இன்று 'உணவுக்குப் பிறகு மருந்து' என்றச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல இடங்களில் ஆரோக்கியமற்ற உணவு வகைகளைசாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக் கொண்டவர்கள் அதிகம். இக்காலக்கட்டத்தில், வீட்டுச் சாப்பாடு போலவே எப்போதும் திகட்டாத ஆரோக்கியமான உணவு வகைகளை சுவையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது 'தனம் மெஸ்'.
இங்கு காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் உயர்தர சைவம் / அசைவம் அறுசுவை உணவுவகைகள் கிடைக்கும். காலையில் இட்லி, பொங்கல், வடை, பூரி, தோசை போன்ற உணவுகளும், மதியம் சைவ உணவில் அப்பளம், பொரியல், கூட்டு, சாம்பார், வத்த குழம்பு, ரசம், மோர், ஊறுகாய் கிடைக்கும் மற்றும் அசைவ உணவாக ப்ரைடு ரைஸ், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பொரியல், மீன் குழம்பு, காடை கிரேவி, சிக்கன் 65, நண்டு குழம்பு, இறால் குழம்பு போன்றவைகளும், இரவில் இட்லி, தோசை, சப்பாத்தி புரோட்டா, சிக்கன் கிரேவி, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மற்றும் அசைவ உணவுகளும் கிடைக்கும். ஆர்டரின் பேரில், வீட்டு விசேஷ தினங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் உணவு வகைகள் தயார் செய்து டெலிவரி செய்யப்படும். குடும்பத்துடன் உணவருந்தும் வகையில் உணவகத்தில் ஏ/சி வசதி செய்யப்பட்டுள்ளது. என்றார்.
வாழ்துக்கள்..
ReplyDelete