அதிராம்பட்டினம், பிப்.21
அதிராம்பட்டினம் பேரூர் சாலையோரத்தில் விளம்பரத் தட்டிகள், பிளெக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சிகள், ப்ளெக்ஸ் பேனர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி, அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், அதிமுக பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, திமுக பேரூர் இணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், அமமுக பேரூர் செயலாளர் ஜமால் முகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரூர் செயலாளர் என்.காளிதாஸ், தமுமுக அதிரை பேரூர் செயலளார் எம்.ஆர் கமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், "சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிளக்ஸ், பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை உடனடியாக முற்றிலுமாக அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்" என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூர் சாலையோரத்தில் விளம்பரத் தட்டிகள், பிளெக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சிகள், ப்ளெக்ஸ் பேனர் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி, அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், அதிமுக பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, திமுக பேரூர் இணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், அமமுக பேரூர் செயலாளர் ஜமால் முகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரூர் செயலாளர் என்.காளிதாஸ், தமுமுக அதிரை பேரூர் செயலளார் எம்.ஆர் கமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், "சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிளக்ஸ், பேனர்கள், தட்டிகள் வைக்கக்கூடாது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை உடனடியாக முற்றிலுமாக அகற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்" என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.