தஞ்சாவூர் மாவட்டம், வருகின்ற 08.02.2019 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :
தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் வருகின்ற 08.02.2019 அன்றும், விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 14.02.2019 அன்றும் நடைபெறவுள்ளது. 08.02.2019 மற்றும் 14.02.2019 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் மருந்து வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6,88,987 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
குடற்புழு நீக்க மாத்திரைகள் அனைத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் வழங்கப்படவுள்ளது.
குடற்புழுத்தொற்றினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பிசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலிää வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
குடற்புழு பாதிப்பிலிருந்து குழந்தைகளை காக்க உணவு உட்கொள்வதற்கு முன்னும் மற்றும் மலம் கழித்த பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல், காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், சுகாதார கழிவறைகளை பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் போன்ற சுகாதார வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் குடற்புழு நீக்கப்பட்டு குழந்தைகளுக்கு இரத்த சோகை தடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். மேலும் குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும்.
எனவே, இத்தகைய நன்மைகளைக் கொண்ட தேசிய குடற்புழு நீக்க நாளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் மருந்தினை எடுத்துக்கொண்டு முழுமையான பயனை அனைத்து குழந்தைகளுக்கும் பெற செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :
தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் வருகின்ற 08.02.2019 அன்றும், விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 14.02.2019 அன்றும் நடைபெறவுள்ளது. 08.02.2019 மற்றும் 14.02.2019 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் மருந்து வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6,88,987 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
குடற்புழு நீக்க மாத்திரைகள் அனைத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் மூலம் வழங்கப்படவுள்ளது.
குடற்புழுத்தொற்றினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பிசியின்மை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலிää வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
குடற்புழு பாதிப்பிலிருந்து குழந்தைகளை காக்க உணவு உட்கொள்வதற்கு முன்னும் மற்றும் மலம் கழித்த பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல், காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், சுகாதார கழிவறைகளை பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் போன்ற சுகாதார வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.
குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் குடற்புழு நீக்கப்பட்டு குழந்தைகளுக்கு இரத்த சோகை தடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். மேலும் குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கும்.
எனவே, இத்தகைய நன்மைகளைக் கொண்ட தேசிய குடற்புழு நீக்க நாளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் மருந்தினை எடுத்துக்கொண்டு முழுமையான பயனை அனைத்து குழந்தைகளுக்கும் பெற செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.