அதிராம்பட்டினம், பிப்.05
கஜா புயலில் பாதிப்படைந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர்களின் அலைக்கழிப்பால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்துறை சார்பில், ஏரிப்புறக்கரை வருவாய் கிராமப்பகுதியில் கஜா புயலில் பாதிப்படைந்தோருக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்க கடந்த டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதிப்படைந்தோருக்கு டோக்கன் வழங்கி நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எஞ்சிய நிவாரணப் பொருட்கள் ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடந்த டிச.29ந் தேதி அதிராம்பட்டினம் பிலால் நகர் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த, பட்டுக்கோட்டை தாலுகா சிறப்பு வட்டாட்சியர் அருள்ராஜ் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, மீண்டும் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து, ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் (பிப்.3) டோக்கன் வழங்கி, அடுத்த நாள் நிவாரணப்பொருட்கள் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்கள் ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டி இருந்தது. அலுவலர் வராததால் அன்று நாள் முழுவதும் பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அலுவலகம் சென்றனர். மீண்டும் அலுவலகம் பூட்டி இருந்தது.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச்சங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வழங்காமல் அலைக்கழிப்பதாலும், கடந்த 3 நாட்களாக கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்து கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் போராட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா சிறப்பு வட்டாட்சியர் தினத்தம்பி, ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், அடுத்த 2 தினங்களுக்குள் விடுபட்டவர்களுக்கு அந்தந்தப்பகுதியில் நிவாரணப்பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கஜா புயலில் பாதிப்படைந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர்களின் அலைக்கழிப்பால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்துறை சார்பில், ஏரிப்புறக்கரை வருவாய் கிராமப்பகுதியில் கஜா புயலில் பாதிப்படைந்தோருக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்க கடந்த டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதிப்படைந்தோருக்கு டோக்கன் வழங்கி நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எஞ்சிய நிவாரணப் பொருட்கள் ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச் சங்க கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடந்த டிச.29ந் தேதி அதிராம்பட்டினம் பிலால் நகர் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த, பட்டுக்கோட்டை தாலுகா சிறப்பு வட்டாட்சியர் அருள்ராஜ் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, மீண்டும் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதையடுத்து, ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் (பிப்.3) டோக்கன் வழங்கி, அடுத்த நாள் நிவாரணப்பொருட்கள் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கு பொதுமக்கள் ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டி இருந்தது. அலுவலர் வராததால் அன்று நாள் முழுவதும் பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அலுவலகம் சென்றனர். மீண்டும் அலுவலகம் பூட்டி இருந்தது.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஏரிப்புறக்கரை இந்திய செஞ்சுலுவைச்சங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை வழங்காமல் அலைக்கழிப்பதாலும், கடந்த 3 நாட்களாக கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்து கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் போராட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா சிறப்பு வட்டாட்சியர் தினத்தம்பி, ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், அடுத்த 2 தினங்களுக்குள் விடுபட்டவர்களுக்கு அந்தந்தப்பகுதியில் நிவாரணப்பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.