பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கான இணையதள முன்பதிவு வசதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜி.மூர்த்தி கூறியது:
கடந்த பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கும், மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இரவு 7.45 மணிக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணிக்க இணையதள முன்பதிவு வசதியும் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 15 நாள்களாக இந்த 2 பேருந்துகளுக்கான இணையதள முன்பதிவு வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திலும் இப்பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் இவ்விரு பேருந்துகளும் தினமும் முறையாக இயக்கப்படுவதில்லை. நாளடைவில் இவ்விரு பேருந்துகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தற்போது பட்டுக்கோட்டை~ சென்னைக்கு நேரடி ரயில் போக்குவரத்து வசதி இல்லாத சூழலில், தனியார் பேருந்து கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு இந்த அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதையே இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
எனவே, முடக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை ~ சென்னை அரசு விரைவுப் பேருந்துகளுக்கான இணையதள முன்பதிவு வசதியை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்
இதுகுறித்து பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜி.மூர்த்தி கூறியது:
கடந்த பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கும், மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இரவு 7.45 மணிக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணிக்க இணையதள முன்பதிவு வசதியும் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 15 நாள்களாக இந்த 2 பேருந்துகளுக்கான இணையதள முன்பதிவு வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திலும் இப்பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் இவ்விரு பேருந்துகளும் தினமும் முறையாக இயக்கப்படுவதில்லை. நாளடைவில் இவ்விரு பேருந்துகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தற்போது பட்டுக்கோட்டை~ சென்னைக்கு நேரடி ரயில் போக்குவரத்து வசதி இல்லாத சூழலில், தனியார் பேருந்து கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு இந்த அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதையே இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
எனவே, முடக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை ~ சென்னை அரசு விரைவுப் பேருந்துகளுக்கான இணையதள முன்பதிவு வசதியை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.