.

Pages

Sunday, February 17, 2019

அதிரையில் PFI உதய தினத்தில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மவுன அஞ்சலி!

அதிராம்பட்டினம், பிப்.17
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்.17) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் உட்பட  இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் 5 இடங்களில் அவ்வமைப்பின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் தலைவர் முகமது புஹாரி தலைமை வகித்தார். அவ்வமைப்பின்  மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் கலந்து கொண்டு அவ்வமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக, புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அவ்வமைப்பின் யூனிட் தலைவர்கள் ஜாவித், பிலால் நகர் பகுதியிலும், அகமது சலீம், கல்லூரி முக்கம் அருகிலும், போஸ்ட் ஆபீஸ் பகுதியில் அதிரை பேரூர் செக்கடிமேடு பகுதியில், பேரூர் தலைவர் முகமது புகாரி, செயலாளர் அபூபக்கர் ஆகியோர் கொடியேற்றினர். இந்நிகழ்வில், அவ்வமைப்பின் செயல் வீரர்கள், ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.