அதிரை நியூஸ்: மே 03
கும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேற்று (02.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலத்தநல்லூர் வாகன சோதனை சாவடி மையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையின் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.
மேலும், சென்னையிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, தேவைபடுபவர்களுக்கு அங்கேயே ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கான மாதிரியை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களின் விவரங்களை முழுமையாகப் பெற்று, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களை அவரவர் வீட்டிலேயே தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திட தேவையான நடவடிக்கையை எடுத்திடுமாறு வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, விருத்தாசலத்திலிருந்து 8 மாத கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் கும்பகோணத்திற்கு உரிய ஆவணங்களின்றி வந்ததால், மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்து அனுப்பினார். மேலும், அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெங்களூரிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியர் மற்றும் மூதாட்டி ஆகியோரை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு முத்திரை மற்றும் அடையாள வில்லைகளை வழங்கி, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கு அருகிலுள்ள மண்டபத்தினை ஆய்வு செய்து, தயார் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து கும்பகோணம் மார்க்கத்தில் நீலத்தநல்லூர் மற்றும் அணைக்கரை வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு பதிலாக ஒரே நுழைவு பாதையாக நீலத்தநல்லூர் பாதையை மட்டுமே பயன்படுத்த காவல்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றும், அணைக்கரை பாதையை தவிர்த்து நீலத்தநல்லூர் பாதையை பயன்படுத்துவதன் மூலம், ஒரே இடத்தில் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடியும் எனவும், அணைக்கரை பாதையை அப்பகுதி மக்கள் மட்டும் பயன்படுத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீலத்தநல்லூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூர் சோதனைச் சாவடி மையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேற்று (02.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலத்தநல்லூர் வாகன சோதனை சாவடி மையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையின் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.
மேலும், சென்னையிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, தேவைபடுபவர்களுக்கு அங்கேயே ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கான மாதிரியை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களின் விவரங்களை முழுமையாகப் பெற்று, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்களை அவரவர் வீட்டிலேயே தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திட தேவையான நடவடிக்கையை எடுத்திடுமாறு வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, விருத்தாசலத்திலிருந்து 8 மாத கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் கும்பகோணத்திற்கு உரிய ஆவணங்களின்றி வந்ததால், மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்து அனுப்பினார். மேலும், அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெங்களூரிலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியர் மற்றும் மூதாட்டி ஆகியோரை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு முத்திரை மற்றும் அடையாள வில்லைகளை வழங்கி, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்வதற்கு அருகிலுள்ள மண்டபத்தினை ஆய்வு செய்து, தயார் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து கும்பகோணம் மார்க்கத்தில் நீலத்தநல்லூர் மற்றும் அணைக்கரை வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு பதிலாக ஒரே நுழைவு பாதையாக நீலத்தநல்லூர் பாதையை மட்டுமே பயன்படுத்த காவல்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றும், அணைக்கரை பாதையை தவிர்த்து நீலத்தநல்லூர் பாதையை பயன்படுத்துவதன் மூலம், ஒரே இடத்தில் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய முடியும் எனவும், அணைக்கரை பாதையை அப்பகுதி மக்கள் மட்டும் பயன்படுத்திடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீலத்தநல்லூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் குருசாமி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.