.

Pages

Thursday, July 2, 2020

அதிராம்பட்டினம் அரிமா சங்க 23-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 02
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்கம் 23-வது ஆண்டு, 2020-2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். முகமது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், அரிமா சங்கத் தலைவராக எம்.அப்துல் ஜலீல், செயலாளராக சேக்கனா எம். நிஜாமுதீன், பொருளாளராக எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலராக ஹாஜி எம். நெய்னா முகமது மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

விழாவில், சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்த ஏ.முகமது ஆரிப், அபூபக்கர், கஜாலி ஆகியோருக்கு மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் சி.ராஜகோபால் பதவி பிரமாணம் செய்து வைத்து, சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்காக கே. முகமது அப்துல்லா வழங்கிய ரூ.10 ஆயிரம் நிதி உதவி, ஆதரவற்ற பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக மாவு அரவை இயந்திரம் (கிரைண்டர்) என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், அரிமா சங்க மண்டலத் தலைவர் இன்ஜினியர் எம்.கனகராஜ், வட்டாரத் தலைவர் ஞானமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், மாவட்டத்தலைவர்கள் பேராசிரியர் எஸ்.பி. கணபதி, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

முன்னதாக, நிர்வாக அலுவலர் எம். நெய்னா முகமது சிறப்பு விருந்தினர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் இணைப்புரை வழங்கினார்.

நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், மாணிக்க முத்துசாமி, எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது ஆகியோரின் சேவைக்கு அரிமா சங்க பன்னாட்டு இலச்சினை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டன.

நிறைவில், தலைவர் எம். அப்துல் ஜலீல் ஏற்புரை ஆற்றினார். சங்க இயக்குநர் பேராசிரியர் கே. முருகானந்தம் நன்றி கூறினார். இந்நிகழ்வில், அரிமா சங்க மாவட்டத்தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.