.

Pages

Sunday, July 5, 2020

அதிராம்பட்டினத்தில் ஆற்று மணல் விலை கடும் உயர்வு: எம்-சாண்ட், பி-சாண்ட் மணலை பயன்படுத்த முடிவு!

அதிராம்பட்டினம், ஜூலை 05
ஆற்று மணல் விலை கடும் உயர்வால், அதற்கு பதிலாக எம்-சாண்ட், பி-சாண்ட் மணலை பயன்படுத்த அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் முடிவு செய்துள்ளது.

அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் கடந்த 01-07-2020 அன்று அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் செல்வ விநாயகம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் மாட்டு வண்டி ஆற்று மணல் விலை இரு மடங்காக உயர்ந்திருப்பதால், கட்டுமானம் தொழில் செய்யும் அனைவரும் தற்காலிகமாக ஆற்று மணல் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக எம்-சாண்ட், பி-சாண்ட் மணலை பயன்படுத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.