.

Pages

Friday, July 3, 2020

அதிராம்பட்டினத்தில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஜூலை 03
அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டதன் பேரில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஏ.எச் பசீர் அகமது, கே. பிச்சமுத்து, எம்.சுப்பிரமணியம், எம்.முகமது இக்பால், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்கவேண்டும், கட்டுமானம், ஆட்டோ, கைத்தறி, சுமை, மீனவர், அமைப்பு சாரா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க வேண்டும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 40 கோடி மக்களுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிடு, நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.