.

Pages

Thursday, July 2, 2020

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கல் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூலை 02
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நிகழாண்டின் சிறப்புத் திட்டமான அன்னபூர்ணா திட்டத்தின் கீழ், உதயசூரியபுரம் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாய மக்கள் 200 பேருக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சங்க உறுப்பினர்களான பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவர்களின் மருத்துவமனைகளுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஏ.ஆர் அன்பு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். பைசல் அகமது, செயலாளர் ஏ. சக்திவேல், பொருளாளர் எஸ் சுல்தான் இப்ராகிம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.