அதிராம்பட்டினம், ஆக.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 5
ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு, இலவசமாக 'ஆக்சி பல்ஸ் மீட்டர்' மூலம் பரிசோதனை செய்து உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி கூறியது;
அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையின் ஒவ்வொரு ஆண்டின் தொடக்க விழாவின் போது, இலவசமாக பல் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தி, அதில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள், மேல் சிகிச்சை அளிக்கப்படும். இந்நிலையில், தற்போதைய கரோனா காலத்தில், பல் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக 'ஆக்சி பல்ஸ் மீட்டர்' மூலம் பரிசோதனை செய்து, உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியப்படுகிறது. மேலும், மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைக் கட்டணமும் மிகக்குறைந்த அளவிலேயே பெறப்படுகிறது.
அரசு வழிகாட்டியுள்ள கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றன. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது, தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்ப நிலை கண்டறியப்படுகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.
வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கி வருகிறது.
எனவே, பல் மருத்துவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுக்க விரும்பும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 5
ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு, இலவசமாக 'ஆக்சி பல்ஸ் மீட்டர்' மூலம் பரிசோதனை செய்து உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி கூறியது;
அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையின் ஒவ்வொரு ஆண்டின் தொடக்க விழாவின் போது, இலவசமாக பல் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தி, அதில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள், மேல் சிகிச்சை அளிக்கப்படும். இந்நிலையில், தற்போதைய கரோனா காலத்தில், பல் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக 'ஆக்சி பல்ஸ் மீட்டர்' மூலம் பரிசோதனை செய்து, உடலில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியப்படுகிறது. மேலும், மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைக் கட்டணமும் மிகக்குறைந்த அளவிலேயே பெறப்படுகிறது.
அரசு வழிகாட்டியுள்ள கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றன. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது, தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்ப நிலை கண்டறியப்படுகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.
வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கி வருகிறது.
எனவே, பல் மருத்துவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுக்க விரும்பும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
7094809148
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.