அதிராம்பட்டினம், ஆக. 05
எஸ்டிபிஐ கட்சி சார்பில், 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்படினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என். சபியா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொருளாதார பேரழிவை கொரோனாவை காரணம் காட்டி மறைக்காதே என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
முன்னதாக, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் வரவேற்றார். நிறைவில், இணைச் செயலாளர் சி.அகமது நன்றி கூறினார்.
எஸ்டிபிஐ கட்சி சார்பில், 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்படினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் என். சபியா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், பொருளாதார பேரழிவை கொரோனாவை காரணம் காட்டி மறைக்காதே என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
முன்னதாக, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் வரவேற்றார். நிறைவில், இணைச் செயலாளர் சி.அகமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.