.

Pages

Wednesday, August 5, 2020

தமுமுக சார்பில் அதிராம்பட்டினத்தில் நல்லொழுக்கப் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.05
தமுமுக சார்பில், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி (தர்பியா) அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, முகமது தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவ்வமைப்பின், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு. 'நிர்வாகிகளின் கவனத்துக்கு' என்ற தலைப்பிலும், ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன் 'ஒற்றுமை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

தொடக்கத்தில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் நியாஸ் முகமது அறிமுக உரை நிகழ்த்தினார். மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப் பேசினார்.நிறைவில், துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது நன்றி கூறினார்.

இதில், சகோதரத்துவம், நல்லொழுக்கம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டன. இதில், அவ்வமைப்பினர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.