.

Pages

Thursday, September 10, 2020

அதிராம்பட்டினத்தில் PFI புதிய அலுவலகம் திறப்பு: ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.10
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் புதிய அலுவலகம் திறப்பு விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.


நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஏரியா தலைவர் எஸ்.முகமது ஜாவித் தலைமை வகித்தார். நிகழ்வை, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. இப்ராஹீம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தலைவர் எம்.எஸ்.எம் அபூபக்கர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் அவ்வமைப்பின் கொடி ஏற்றிவைத்து கொள்கை முழக்கமிட்டார். 

நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மண்டல செயலாளர் எஸ்.ரஷீத் அகமது பங்கேற்று பிஎப்ஐ அமைப்பு ஆற்றி வரும் சமூக நலப்பணிகள் பற்றி விளக்கிப்பேசினர். எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் ஏ.அபூபக்கர் சித்திக் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில், சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, அவ்வமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் இசட்.முகமது தம்பி வரவேற்றுப் பேசினார். நிறைவில், அவ்வமைப்பின் யுனிட் தலைவர் நவாஸ் நன்றி கூறினார்.

3 comments:

  1. வாழ்த்துகள் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட செய்தியாளர்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.