கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதிரை கிழக்குக் கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
திங்கள்கிழமை அதிரை அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கல்லூரியில் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாணவர்கள் தங்கியுள்ள விடுதியை மாணவியர் விடுதியாக மாற்றக் கூடாது. விடுதியில் தரமான உணவு வழங்க வேண்டும். கல்லூரிக்கு வந்து செல்ல பேருந்து வசதி வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ். வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ். வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.