.

Pages

Saturday, November 1, 2014

தற்கொலை செய்துகொண்ட மணி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் !

அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான  ஜெயலலிதா சிறையிலடைக்கப் பட்ட தகவல் அறிந்து அதிமுகவினர் பலர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்கள்.

ஜெயலலிதா கைதால் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 193 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்தவர்களில் நமதூர் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45),யும் ஒருவர். இவர் தஞ்சை ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று காலை அதிரைக்கு வருகை தந்த மாநில அமைச்சர் திரு. வைத்திலிங்கம் தற்கொலை செய்து கொண்ட மணி குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆழந்த இரங்கலை வருத்ததுடன் தெரிவித்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கும் ரூ. 3 லட்சம் நிதியுதவியை மணி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

களத்திலிருந்து நூவன்னா

2 comments:

  1. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ஜெயலலிதா ஜெயிலில் இருந்த 21 நாட்களில் தமிழகமெங்கும் நடந்த இயற்கை மரணங்கள், தற்கொலைகள், கொலைகள் ஏன் கருணை சாவுகள் முதற்கொண்டு கணக்கெடுத்து அவர்கள் ஜெயலலிதா சிறையில் இருந்த காரணத்தினால் தான் உயிரை விட்டார்கள் என்று பரப்பப்படுவது எதற்காக என்று யோசியுங்கள்.. இது குறிப்பாக நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கைச் செய்தி போல தெரியவில்லை? அதாவது குன்ஹா எனும் நீதிபதி மட்டும் தன்னை சிறையில் தள்ளி இருக்காவிட்டால் இத்தனை உயிர்கள் போயிருக்காது.. ஆகவே இந்த மரணங்களுக்கு நீதிபதி தான் பொறுப்பே தவிர தான் அல்ல என்று மறைமுகமாக இந்த வழக்கை விசாரிக்கும் மற்ற நீதிபதிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறார்கள் போலும்.. பிணங்களை கேடயங்களாக வைத்து தன்னை வழக்கிலிருந்து காத்துக்கொள்ள முற்படும் ஒரு உத்தி.. ஒரு கேடயத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 3 லட்ச ரூபாய்.

    ஊராட்சி மற்றும் நகர மன்றத் தலைவர்கள்,மாநகர மேயர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் மந்திரிமார்கள் ஆகியோரிடம் இந்த அளவு பாசமும் நேசமும் வரவில்லையே!, கட்சி மந்திரிகள் முடியை கொடுகிறார்கள். நீங்க உயிரை கொடுகிறீர்கள் இந்த 193 நபர்களது குடும்ப உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினால் அவர்கள் குடும்பங்கள் இன்னும் நன்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது, செய்யமாட்டார்கள்!.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.