.

Pages

Tuesday, November 11, 2014

களை கட்டிய கோடியக்கரை ! 40 ஆயிரம் பறவைகள் வருகை !!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயமும், இதன் எதிர்புறம் 10 ஆயிரம் ஏக்கரில் பறவைகள் சரணாலயமும் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலத் தில் ரஷ்யா, ஈரான், ஈராக், ஆஸ்திரேலியா, பாகிஸ் தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்லும். 256 வகை பறவைகள் வந்து செல்கின்றன. சீசன் துவங்கும் அக்டோபர் முதல் வாரத்தில் கொசு உல்லான் பறவைகள் முதலில் வரும். பின் படிப்படியாக மற்ற  பறவைகள் வரும். இந்தாண்டு தற்போது ஈரான், காஸ்பியன் பகுதியில் இருந்து சரணாலயத்துக்கு பூநாரைகள் வந்துள்ளன.

இலங்கையில் இருந்து கடல் காகம், சைபீரியாவில் இருந்து கொசு உல்லான், அண்டார்டிகா பகுதியில் இருந்து கடல் ஆலா, குஜராத்தில் இருந்து செங்கால்நாரை, கூழைக்கிடா, மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கரண்டிவாயான், நத்தை கொத்திநாரை உட்பட 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் லட்சக்கணக்கான பறவைகள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. பறவைகளை காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் கோடியக்கரை பம்ப்ஹவுஸ், இரட்டைத் தீவு, கோவைத் தீவு, மரைக்கான் தீவு, கடற்கரை பகுதி, மணவாய்க்கால் பகுதிகளிலும் கண்டு களிக்கலாம். கடந்த காலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்துக்கு வந்து சென்றன.

தற்போது பருவநிலை மாற்றத்தாலும், வேட்டையாடுதல், பறவைகளின் உணவுகளை மீனவர்கள் பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் படிப்படியாக பறவைகள் வரத்து குறைந்து வருகிறது. பறவைகள் வருகையை அதிகரிக்க ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். சரணாலயத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.









நன்றி : தினகரன்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. காலத்திற்கேற்ற அருமையான பதிவு ...என்னதான் இருந்தாலும் அதிராம்பட்டினம் மரைக்கானாச்சே ....அந்த இஷா தொழுகைக்கு பிறகு .....இடியப்பம் சூடான புரட்டாகளுக்கு இந்த பறவைகளின் மிளகு கறி ஆணாம் ..அம்புட்டு ருசி ....இருப்பினும் வனத்துறைக்கும் மதிப்பு அளிப்போம் ...விருந்தாளிகளை ...விருந்து படைத்துவிட வேண்டாம் ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.