.

Pages

Sunday, November 9, 2014

முத்துப்பேட்டை அருகே வனத்துறையினர் அதிரடி சோதனை ! பறவைகள் வேட்டையாடியவர்கள் சிக்கினர் !

முத்துப்பேட்டை வணசரகதுக்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் அருகே உள்ள மண்ணுக்கு முண்டான் மற்றும் கருணாவூர் கிராமங்களில் சட்ட விரோதமாக பறவைகள் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து திருவாரூர் மாவட்ட வனஅலுவலர் பார்த்திபன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மன்னார்குடி வனசரக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனவர் அயூப்கான், வனகாவலர் ஜான்சன் கென்னடி, தோட்ட காவலர் சிவனேசன் ஆகியோர் சமந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கருணாவூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து மடையான் பறவைகளை பிடித்த கருணாவூர் தெற்கு தெருவில் வசிக்கும் மருதமுத்து மகன் சுந்தர்(28) சிக்கினர். அவரை கைது செய்து அவரிமிருந்து பறவைகள் மீக்கப்பட்டு ரூபாய் 8ஆயிராம் தொகை அபராதமாக வசூல் செய்யப்பட்டது. அதேபோல் மண்ணுக்கு முண்டான் பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்ணிவைத்து பறவைகளை பிடிக்க முயற்சித்த மாதாகோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விக்டர்(30) சிக்கினார். கைது செய்து அவரிடமிருந்து 5ஆயிரம் அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.

செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை, 
முத்துப்பேட்டை

3 comments:

  1. வயல்வெளியில் கண்ணிவைத்து மடையான் பறவைகளை பிடித்த கருணாவூர் தெற்கு தெருவில் வசிக்கும் மருதமுத்து மகன் சுந்தர்(28) சிக்கினர்.

    மாதாகோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விக்டர்(30) சிக்கினார்.

    பறவைகள் சிக்கவில்லை ஆனால் இவர்கள் சிக்கிகொண்டனர் .

    ReplyDelete
  2. பொது நலம் அக்கறை காட்டும் காவலர்கள் அனைத்து விசையத்திலும் அக்கறை காட்ட வேண்டூம். பாவம். இவர் குடூம்பம் . இவர் என்ன மல்டி மில்லியனரா இல்லை வசதி படைத்தவரா,ஒருவரிடம் எட்டும், ஐந்தும், பெற்று என்ன செய்வார்கள் என்று மக்களே சற்று சிந்தியுங்கள் . பாவம் என்று புத்தி சொல்லி வேறு தொழில் செய்ய தூன்டூவதே சிறந்தது.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    என் வீட்டுக்கு அருகில் இருக்கும் காட்டுக் குளத்தை சுற்றி தினமும் ‎மடையன், கொக்கு, போன்ற பறவைகள் பறந்து கொண்டும் இரைகளை ‎வேட்டையாடிக் கொண்டும் இருக்கின்றது. ஆனால் இவைகளை ‎வேட்டையாட யாருக்கும் தைரியம் வரவில்லை.‎

    சில நேரங்களில் சிறவி போன்ற (முக்கிளிதாரா) (கானாங்கோழி)? ‎பறவைகளையும் இங்கு பார்க்கலாம்.‎

    மாலை நேரங்களில் அதிகமான புதிய பறவைகளை இங்கு பார்க்கலாம்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.