மழை என்பது இன்று நேற்று வந்ததல்ல. நாம் உருவாகும் முன்பே
எல்லாம் வல்ல இறைவன் படைத்த படைப்புகளில் மழையையும் படைத்துள்ளான், ஆக மழை நமக்கு
புதுமை இல்லை பழமைதான், இருந்தாலும் இந்த பழமையைத்தான் மனிதன் ஒவ்வொரு நாளும் வானத்தை
பார்த்து இந்த கார்மேகம் மழைநீரை நமதூரில் பொழியக்கூடாதா என்று ஏங்குகின்றான்.
அந்த மழை நீர் அளவுக்கு அதிகமாக பொழிந்தாலோ அல்லது இடைவிடாமல் பொழிந்தாலோ மனிதன்
சடைத்துக் கொள்கின்றான்.
மாதம் மும்மாரி பொழிந்தது என்று நாம்
படித்திருக்கின்றோம், வருடத்தில் தவறாமல் ஏனைய பருவங்களிலும் மழை பொழிந்துள்ளது
என்று வயதில் மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம், வடகிழக்கு பருவம் தவறாமல்
பொழிந்த காலத்தை என் வயதை உடையவர்கள் நன்கு அறிவார்கள். இந்த தலைமுறையினர்களுக்கு
இதெல்லாம் தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.
2008ஆம் வருடம் நவம்பர் மாதம் புயல் காற்றுகளோடு கருமையான மழை
பெய்தது, அந்த வருடம் அடித்த புயலில் அதிரையை சுற்றிஉள்ள மற்றும் அதிரையிலும் பல
இடங்களில் பசுமை மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து மின் துண்டிப்பு ஏற்பட்டு
அதிரை நான்கு நாட்கள்வரை இருளில் மூழ்கி இருந்தது. வீடுகளில் உள்ள ஆழ்துளை
கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல், வெளியிலிருந்து ஜெனரேட்டர்களை வரவழைத்து
ஒவ்வொரு வீடாக ஆழ்துளை கிணற்றுக்கு 15-நிமிடங்கள் மின் சப்பளை கொடுத்து நீர் தேக்கத்தில் நீரை
நிரப்பினார்கள்.
பல மொபைல் போன்கள்
சார்ஜ் செய்ய முடியாமல் செயல் இழந்து காணப்பட்டது, ஒரு சில மொபைல் போன்கள் சார்ஜ்
ஏற்றப்பட்டு செயல் பட்டன. செல் போன் டவர்களில் BSNL,
VODAFONE மட்டும் டீசல் உதவியோடு செயல் பட்டன, மாற்ற ஏனைய
செல் போன் டவர்கள் எல்லாம் செயல் படாமல் கிடந்தன.
2008-நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப் படங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights
Included.
Thanjavur District Organizer.
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.