இதில் பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, செயல் அலுவலர் முனியசாமி, தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் PMK தாஜுதீன், 16 வது வார்டு உறுப்பினர் N.A முஹம்மது யூசுப், 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்தீப், திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், TIYA நிர்வாகிகள் உள்ளிட்டோர் செடியன் குளத்தை பார்வையிட்டனர்.
பொதுவாக செடியன் குளத்திற்கு ஆற்று நீரை கொண்டு வருவதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது வழிமுறை சிஎம்பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரை கொண்டுவருவது. இது வழமையாக பின்பற்றப்படுவது. இந்த வழிமுறை மூலமே கடந்த காலங்களில் செடியன் குளத்திற்கு சிஎம்பி வாய்க்காலிலிருந்து மகிழங்கோட்டை பெத்தான் குளம் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை, அரசியல் சூழல், கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஆர்வலர்கள், வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வருவதில் கடந்த இரண்டு வருடங்களாக தடை ஏற்பட்டது.
மற்றொரு வழிமுறையாக, வீணாக கடலில் கலக்கும் ஏரி நீரை மோட்டார் பம்பிங் மூலம் குளத்திற்கு கொண்டுவருவது. குறிப்பாக ஏரியிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்கள் வரை செல்லும் பாதையை சீரமைத்து செடியன் குளத்திற்கு மோட்டார் பம்பிங் மூலம் நீரை கொண்டு வரலாம்.
இது குறித்து அதிரை வாழ் சமூக ஆர்வலர்களின் கவனத்துக்கு எடுத்துசெல்லும் விதமாக அதிரை நியூஸில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
களத்திலிருந்து நூவன்னா
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரையர்களாலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களாலும் மறக்கமுடியாத குளம் என்றால் அது செடியன் குளமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்த குளம் இந்த செடியன் குளம்.
அன்று இந்த குளத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட வாய்கள் இருந்தன, அந்த வாய்கள் மூலம் இந்தக் குளம் தன பசியை நிரப்பிக் கொண்டு இருந்தது.
இன்று இந்த குளத்தின் வாய்கள் அனைத்தும் சில அதிமேதாவிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணத்தினால் இந்த குளம் தன் பசியை நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றது.
ஆகவே, சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அறுவை சிகிச்சை மூலம் இந்த செடியன் குளத்திற்கு வாய்களை உண்டாக்கி நீர் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
தண்ட வாலாத்தில் நின்று போஸ் கொடுப்பதை பார்த்துவிட்டு நான் என்னமோ ரயில் விட சொல்லி பேரூராச்சி நிர்வாகி இடம் மனு கொடுகீரார்கள் என்று நினைத்து விட்டேன்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், இந்த குலத்திற்க்கு தண்ணீர் கொண்டு வர செய்யும் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.
ஆய்வு செய்ததோடு நின்று விடாமல் செடியங்குளத்தை மற்ற குளங்களைப் போல் பராமைப்பதற்க்கான துரித நடவடிக்கை எடுத்து சீர்படுத்தி தண்ணீரை கொண்டு வந்து விட்டால்
ReplyDeleteமக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் .
ReplyDeleteவெக்க கேடு