.

Pages

Sunday, November 9, 2014

கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18 வது வார்டுக்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படும் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அஜ்மல்கான் நம்மிடம் கூறியதாவது...
'எங்கள் பகுதியின் குடியிருப்பு பகுதியில் காணப்படும் கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் கழிவு நீர் வெளியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்டோரிடம் எடுத்துச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் சாலையோரத்தில் போடப்பட்ட பொது குடிநீர் பைப் உடைந்து காணப்படுகிறது, இதிலிருந்து குடிதண்ணீர் வீணாக சாலை முழுவதும் வழிந்து ஓடுகிறது. இவற்றை பிளாஸ்டிக் பையால் சுற்றி தண்ணீர் வழிந்து ஓடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

களத்திலிருந்து நூவன்னா

1 comment:

  1. தினமும் எதாவது பேரூர் நிர்வாகத்தின் குறைகள் தான் பார்க்க முடிகிறது, நிர்வாகம் செத்து போச்சா? சொல்லுமளவுக்கு இருந்தா கொஞ்சம் எழுதுங்களேன்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.