.

Pages

Friday, April 17, 2015

அதிரையில் 'அம்மா திட்டம்' முகாம்: 182 மனுக்கள் மீது உடனடி தீர்வு !

அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் தமிழக அரசின் அம்மா திட்டம் முகாம் இன்று காலை நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் கே. கணேஷ்வரன், தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் எல். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் மனுக்களை பெற்றனர்.

முன்னதாக முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை தமிழக அரசின் அம்மா திட்டம் செயல்பாடு குறித்து பயனாளிகளிடம் விளக்கி கூறினார்.

முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விரைவு பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடிநீர் வசதி, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகள் உள்பட 227 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 182 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்று அளிக்கப்பட்டது.

அதிரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன், சிவக்குமார், ரவிக்குமார், அபூதாஹிர், அப்துல் லத்திப், கூட்டுறவு வங்கி சங்க துணை தலைவர் முஹம்மது தமீம், தக்வா பள்ளி ட்ரஸ்ட் உறுப்பினர் ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். மேலும் 'அதிரை நியூஸ்' நிர்வாகி கே. இத்ரீஸ் அஹமது தலைமையில் குழுவினர் பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.

அதிரை வருவாய் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு-புதுமனைத்தெரு-சிஎம்பி லேன்-ஆலடித்தெரு-ஆஸ்பத்திரி தெரு-நெசவுத்தெரு-காலியார் தெரு-சுரைக்கா கொல்லை-பழஞ்செட்டி தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

 


1 comment:

  1. மக்களை அலய விடாமல் பயனுள்ள திட்டம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.