.

Pages

Thursday, April 16, 2015

காட்டுப்பள்ளி கந்தூரி தொடர்பாக கோட்டாட்சியார் முன்னிலையில் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் கடும் நிபந்தனைகள் விதிப்பு !

காட்டுப்பள்ளி கந்தூரி எதிர்வரும் 17-04-2015 அன்று கொடிமரம் நடும் விழா நிகழ்ச்சியும், 20-04-2015 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 30-04-2015 அன்று சந்தனக்கூடு விழா நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்தூரி விழா தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளதென கருதி, இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியார் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

இதில் கந்தூரி விழா கமிட்டியினர், தாருத் தவ்ஹீத் அமைப்பின் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அதிரை கிளை நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஊர்வலம் காட்டுப்பள்ளி தர்ஹாவில் மாலை 4.30 மணிக்கு தொடங்கி, அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று, இரவு 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

2. ஊர்வலம் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் சிறிதளவு சப்தம் வரக்கூடிய பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வல வழியில் எந்த இடத்திலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

3. மேலத்தெரு அல்பாக்கியதூஸ் சாலிஹாத் பள்ளிவாசல், நடுத்தெரு, புதுமனைத்தெரு, சி.எம்.பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளில் ஊர்வலம் செல்லக்கூடாது.

4. விழா குழுவினர் கந்தூரி ஊர்வலத்தில் பங்கேற்று செல்லவேண்டும்.

5. ஊர்வலத்தில் கொடி, பள்ளாக்கு, 5 உருப்படி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உருப்படிக்கும் 10 மீட்டர் இடைவெளியில் செல்ல வேண்டும்.

6. தொழுகை பள்ளிவாசல்களுக்கு முன்னும் பின்னும், 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசை குழுவினர் இசைக்க கூடாது.

7. ஊர்வலத்தில் முன்னும், பின்னும் சிறியவர், பெரியவர்கள் ஆடி, பாடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

8. எதிர்தரப்பினர் சட்டம் ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும், கந்தூரி விழாவிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.

9. விழாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழா குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல நிபந்தனை மாஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.